Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தில் பொதுமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  இன்று (25) இடம்பெற்றது.

ஆலய மதகுருவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அத்துடன் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் முனவ்வர், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலய நிருவாகத்தினர், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பிரதேசவாசிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post