Breaking
Fri. Dec 5th, 2025

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்; ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட், சபை உறுப்பினர்களான எஸ்.கிருபா, எஸ்.கிருபைராசா, எம்.பி.ஜௌபர், எம்.எச்;.அமீர், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சசி மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சாளம்பச்சேனை மற்றும் வாகனேரி வீதி புனரமைப்பு வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாகனேரி, மைலந்தனை, சாளம்பச்சேனை, பொத்தானை, ஜப்பார்திடல் ஆகிய கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதியமைச்சர் கேட்டறிந்து கொண்டதுன் அவர்கள் முன்வைத்த யானை வேலி, குடி நீர் பிரச்சினை, வீதி மின் விளக்கு போன்ற பிரச்சினைகளை தீர்த்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

-முர்ஷிட் கல்குடா-

 

 

Related Post