Breaking
Sat. Dec 6th, 2025

பாறுக் சிகான்

யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் 30 வருடங்களிற்கு பின் இன்கிலாப் சஞ்சிகை வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதுடன் விவசாய பீட பீடாதிபதி கலாநிதி திருமதி.எஸ்.சிவசந்திரன் ,கலைப்பீட பீடாதிபதி வி.பி சிவநாதன் ,பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி.எ.அற்புதராஜ்,வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி,மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமார்.

மற்றும் விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Post