Breaking
Sat. Dec 6th, 2025

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட 36 பாடசாலைகளின் அதிபர்களினால் கடந்த 2018-03-29 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் A.M.M.நௌசாத்திடம் கோரப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக, அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் பேரில், Rishad Bathiudeen Foundationனால் மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (31) மல்வத்தை கமு/சது/மஜீத்புர வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அதிபர் எம்.எம்.முசம்மில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(தி)

 

Related Post