Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு- 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வரதராஜ் துரைராஜ் மற்றும் வே. ஜீவராஜ் ஆகியோரை ஆதரித்து, மதவுவைத்தகுளத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தேர்தல் காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது.

வேட்பாளர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்  முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மட், பாஸ்டர் கிரியோன், பாஸ்டர், அயல் வட்டார வேட்பாளர்களான கனகா, தம்பா பிள்ளை பிரமேந்திரன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

Related Post