Breaking
Mon. Dec 15th, 2025

நூறு நாட்கள் வேலைத்­திட்டம் என்­பது தேசிய அர­சாங்­கத்­திற்­கான பிர­சா­ரமே தவிர கோட்­பாடு அல்ல. மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப டும் வரையில் தேசிய அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பிரதித் தலை­வரும் தூய்­மைக்­கான நாளை அமைப்பின் தலை­வ­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதே தேசிய அரசின் பலம் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

சமூக நீதிக்­கான மக்கள் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு கோட்டே நாக விகா­ரையில் இடம்­பெற்­றது. இதில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

சர்­வ­ாதி­கா­ர­மாக செயற்­பட்ட மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சி­யினை வீழ்த்­தவும் மக்கள் விரு ம்பும் வகையில் ஆட்­சி­யினை அமைக்க வேண்­டு­மென இவ் அர­சாங்­கத்­தினை உரு­வாக்­கவும் நாம் பாரிய கஷ்­டங்­களை எதிர்­கொண்டே மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தினோம். அதி­கா­ரத்தில் யார் இருக்­கின்­றனர் என்­பதை விடவும் மக்கள் அர­சாங்­கத்தை விரும்­பு­கின்­ற­னரா என்­பதே முக்­கி­ய­மா­னது. நாம் இந்த தேசிய அர­சுடன் இணைந்­தி­ருப்­பது யாரு­டைய தனிப்­பட்ட தேவை­க­ளுக்­கா­கவும் அல்ல. மக்­களின் நலனை பாது­காக்க வேண் டும் என்­ப­தற்­கா­கவே.

அதே போல் நூறு நாட்­களில் பல மாற்­றங் ­களை கொண்டு வர வேண்டும் என்­ப­தற்­கா­கவே. குறிப்­பாக சொல்­வ­தாயின் இப்­போது நடை­மு­றையில் இருக்கும் தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தினை கொண்டு வர வேண்டும். ஆனால் தேர்தல் முறை­மை யில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வதில் பிர­தான அர­சியல் கட்­சிகள் யாருக்கும் ஈடு­பாடு இல்­லை­யென்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. ஆனால் இப்­போது இருக்கும் தேர்தல் முறையில் சாத­க­மான விட­யங்கள் சில இருந்­தாலும் பாத­க­மான விளை­வு­களும் வீண் செல­வு­க­ளுமே அதி­க­மா­னது. ஆனால் இவ் முறைமை நீக்­கப்­ப­டு­வதால் பிர­தான சிலர் அர­சி­ய­லுக்கு வர முடி­யா­மையின் கார­ணத்­தி­னா­லேயே வெறுக்­கின்­றனர். ஆனால் உட­ன­டி­யாக தேர்தல் முறை­மையில் மாற் றம் கொண்டு வரப்­பட வேண்­டிய தேவை உள்­ளது. இவை தொடர்பில் தேசிய நிறை­வேற்று அதி­கார சபையில் பேசி வரு­கின் றோம்.

ஆனால் இன்று தேசிய அர­சாங்­கத்தின் நூறு நாட்­களில் இதை செய்து முடிப்­ப­தற்­கான கால அவ­கா­சமோ எஞ்­சி­யி­ருக்கும் நாட்­களோ போதாது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தேர்­தலை நடத்தக் கோரி அவ­ச­ரப்­ப­டுத்­து­கின்­ற னர். அவர்கள் தேர்­தலை நடத்த வேண்­டு­மென்­ப­தாயின் நாம் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. ஆனால் தேர்தல் நடத்த முன் னர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யி னை முழு­மை­யாக மாற்­றியும் 17ஆவது திரு த்தச் சட்­டத்­தினை செயற்­ப­டுத்­தியும் அதே போல் தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தி னை ஏற்­ப­டுத்தியும் விட்டு பின்னர் தேர்­தலை நடத்த வேண்டும்.

எனவே அனை­வரும் ஒன்றை தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். இப்­போது அமை­யப்­பெற்­றுள்ள தேசிய அரசு இன்னும் ஒரு வருடம் நீடிக்­கப்­ப­டு­மாயின் நாட்டில் பல திருத்­தங்­களை கொண்டு வர முடியும். அதற்­காக தொடர்ந்து தேசிய அர­சாங்கம் கொண்டு செல்­லப்­பட வேண்டும் என்­ப­த ல்ல. நூறு நாட்­க­ளுக்குள் அனைத்­தையும் செய்து முடிக்க முடி­யு­மாயின் நல்­லது. அவ்­வாறு அல்­லாது மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­ கு­று­தி­களை இடையில் நிறுத்தி விட்டு தனிக் கட்சி அர­சி­யலை செய்ய நினைப்­பதே தவ­ றா­னது. எனவே இன்னும் சிறிது காலம் தேசிய அர­சி­னூ­டாக செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

மாது­லு­வாவே சோபித தேரர்

இது தொடர்பில் கோட்டை நாக விகா­ரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாவே சோபித தேரர் கருத்து தெரி­விக்­கையில்,

இந்த ஆட்சி மூவின மக்­களும் ஒன்­றி­ணைந்து பெற்றுக் கொடுத்­துள்ள தேசி­யத்­துக்­கான ஆட்­சி­யாகும். தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் அனை­வ­ரி­னதும் பங்­க­ளிப்பும் அனைத்து கட்­சி­களின் பங்­க­ளிப் பும் இத் தேசிய அரசில் உள்­ளது. எனவே அவ்­வா­றான அனை­வ­ரி­னதும் ஒத்­து­ழை ப்­புடன் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அவற்­றினை மீண்டும் சீர­ழிக்கும் வகையில் தவ­று­களை விட்டு விடக்­கூ­டாது. ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி ஆகியவற்றின் முழுமையான ஆதரவு உள்ளது. இவ்வாறான ஒரு நிலை யில் பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டிற்கு தேவை யான அனைத்து மாற்றங்களையும் ஏற்படு த்தி விட வேண்டும். இல்லாது உடனடி யாக தனிக்கட்சி அரசியலுக்காக பொதுத் தேர்தலை நடத்தினால் நாட்டை மீண்டும் எதிரிகளின் கைகளில் கொடுப்பதற்கு சம மாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Post