இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றுப் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நேற்று நடைபெற்ற இலங்கை, தென்னாபிரிக்கா ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இதையடுத்து தென்னாபிரிக்க ரசிகர்கள் இலங்கை அணி ரசிகர்களை கிண்ணடல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே வாள்வெட்டு இடம்பெற்றது.
இதில் ரஜினிகாந், விஜயகாந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர். முழங்காவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

