சுப்பிரமணிய சுவாமி படத்தை எரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணிய சுவாமி வீட்டு முன்பு வியாழக்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் சி.ராஜேந்திரபிரசாத் தலைமையில் சென்றனர்.

அவர்களை மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவரது படத்தை தீ வைத்து கொளுத்தினர்.