Breaking
Fri. Dec 5th, 2025

அண்மையில் உலகம் தழுவிய முறையில் ஒரு திருகுர்ஆன் மனன போட்டி அல்ஜீரியாவில் நடை பெற்றது அந்த போட்டியில் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பல நுற்றுக்கணக்கான திருகுர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் கலந்து கொண்டனர்.

அந்த போட்டியில் யாரும் எதிர் பாராத விதத்தில் அல்ஜீரியாவை சாந்த சிறுமி வஹீபா முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சிரய பட வைத்தாள்.

சிறு வயதிலேயே திருகுர்ஆனை மனனம் செய்ததோடு உலக அளவில் நடை பெற்ற ஒரு போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கும் அந்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது.

இந்த நிகழ்வை தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள சவூதி அரேபியாவை சார்ந்த இஸ்லாமிய அறிஞர் அரீபி அவர்கள் அந்த சிறுமிக்கா பிரார்த்தித்திருப்பதோடு இப்படி பட்ட திறமை நிறைந்த சிறுமியை பெற்றேடுத்த பெற்றோர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் என பாராட்டியிருப்பதோடு.

இது போன்ற குழந்தைகள் நமது சமூகத்தில் அதிகம் தோன்ற ஒவ்வொரு பெற்றோரும் முயர்ச்சிக்க வேண்டும் எனவு கேட்டு கொண்டுள்ளார்.

By

Related Post