Breaking
Fri. Dec 5th, 2025

இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நோபல் குழுவின் தலைவர் தோர்ப் ஜோயெர்ன், இன்று அமைதிக்கான நோபல் விருதுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 278பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post