Breaking
Fri. Dec 5th, 2025

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் சாளம்பைக்குளம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில்  போட்டியிடும் வேட்பாளர்களான கே.எம். ரஹீம், என்.பி.ஜவாஹிர் ஆகியோரை ஆதரித்து நேற்று மாலை (12) கூட்டமொன்று இடம்பெற்றது.

சாளம்பைகுளத்தில் வேட்பாளர் கே.எம்.  ரஹீமின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

Related Post