Breaking
Sun. Dec 7th, 2025

கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும்.

இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :-

கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு என்றார்.

இந்த குழுவின் புதிய சட்டத்திற்கு முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இளவரசர் நயிப் தெரிவித்துள்ளார்.

Related Post