Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம்  (15) இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் கற்பிட்டிப் பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் தலைமையில், நவவி எம்.பி யின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் இப்லால் அமீன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட வேற்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளை முன்னிறுத்தி பேசியதுடன்,  அதற்கான காரணங்கள் தொகுக்கப்பட்டு, எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் எமது வெற்றிக்கு எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற வியூகமும் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

Related Post