Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில், கல்பிட்டி, பெரியகுடியிருப்பு ஜன்னதுல் அஷாபிர் பாலர் பாடசாலைக்கு ரூபாய் 100,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியிலிருந்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நடவடிக்கைக்காக தொலைக்காட்சி (Television) மற்றும் பிளாஸ்டிக் கதிரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கல்பிட்டி நகர அமைப்பாளர் முஸம்மில் இன்று (25)  பாலர் பாடசாலைக்கு விஜயம் செய்து, உபகரணங்களை வழங்கி வைத்தார்.

 

 

Related Post