Breaking
Sun. Dec 7th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் சொந்த நிதியொதுக்கீட்டில், மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு ஒரு தொகுதி தளபாடங்கள்  இன்று (25) அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் தலைவியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

Related Post