Breaking
Fri. Dec 5th, 2025

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம் சஹாப்தீன், அதுதொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் ஸ்கொட்லாந்து பிரஜைகளை மாலக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post