Breaking
Mon. Apr 29th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபை வட்டார மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூபின் தலைமையில் மூதூர் சாரா மண்டபம் மற்றும் கிண்ணியா நூலக மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் சபை உறுப்பினர்கள், வட்டார இணைப்பாளர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் திருமலை மாவட்டத்துக்கான வருகை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ன)

 

Related Post