Breaking
Mon. May 6th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர வட்டாரத்திலிருந்து மத்திய குழுவிற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம், கல்பிட்டி நகர அமைப்பாளர் முஷம்மிலின் ஏற்பாட்டில், கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் நேற்று (12) இடம் பெற்றது.

இதன் போது, கல்பிட்டி நகர வட்டாரங்களுக்கான நிருவாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பவுசான், முதலைப்பாளி வட்டார அமைப்பாளர் தௌபீக் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும், ஊர்ப்பிரமுகர்களும்  கலந்துக்கொண்டனர்.

(ப)

 

Related Post