Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தின் பௌஸ் மாவத்தை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச கிளை  நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு லங்கா சதொச கிளையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில்,பிரதேச சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், லங்கா சதொச முகாமையாளர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post