Breaking
Sun. Dec 7th, 2025

நிந்தவூரின் நெல்லுத்தீவு பிரதேச சமூக, பெளதீக மற்றும் உள்கட்டுமான அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, நெல்லுத்தீவு வாழ் மக்களுக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(26) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.

குறித்த பிரதேசத்தில் காணப்படும் பாதை விஸ்தரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதன்போது நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post