Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைக் காரியாலயம் நிந்தவூரில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர்  எஸ்.சுபைர்தீன், முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜுனைதீன் மான்குட்டி மற்றும் கிழக்கு மாகாண  இளைஞர் அமைப்பாளர் முஷார்ரப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு-

Related Post