Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட உயர்பீட உறுப்பினரும், அக்குரணை அமைப்பாளருமான ஐ.எம்.இல்லியாஸ், தேசிய அருங்கலைகள் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால், அவருக்கான நியமனக் கடிதம், நேற்று (04) வழங்கி வைக்கப்பட்டது..

கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இல்லியாஸ் அவர்கள், நீண்டகாலமாக சமூகத்துக்காக பல்வேறு வழிகளிலும் சேவையாற்றி வருகிறார். இவர் ரோயல் கெயார் வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்சல மற்றும் சதொச நிறுவனத்தின் பணிப்பாளருமான றியாஸ் இஸ்ஸதீன் உட்பட கண்டி மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

(ன)

Related Post