Breaking
Fri. Dec 5th, 2025

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்றையதினம் (06/10/2018) இடம்பெற்றது..

இந் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமான்ய றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு அவர்களும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சஜித் பிரேமதாச அமைச்சரிடம் எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தில் செய்யப்படவேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும் அதேபோல் மன்னார் பிரதேசபையின் உப காரியாலயம் எருக்களம்பிட்டியில் உருவாக்க உதவ வேண்டும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கேரிக்கை முன்வைத்தனர் அந்த கேரிக்கையை ஏற்ற அமைச்சர் இந்த பிரதேசத்திற்கு அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் தெரிவித்தார்…

Related Post