Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் மற்றும் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் உள்ளிட்ட குழுவினர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  கடந்த வியாழக்கிழமை (04) அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சருடன்  கலந்துரையாடிய குழுவினர், மேற்கொண்டு அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

கண்டி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க  தீர்மானித்திருப்பதாகவும், தங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் நல்க வேண்டுமெனவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார். 

இந்தக் கலந்துரையாடலின் போது, மக்கள் காங்கிரஸின்  கண்டி மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post