Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின்  புனரமைப்புப் பணியினை, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முகம்மது, இணைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம் ஆகியோர் ஆரம்பித்து வைத்தார்கள்.

அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா வேலனர் சின்னக்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் புதிதாக தோன்றப்பட்டுள்ள கிணற்றின் நிர்மாணப் பணிகளையும், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முகம்மது, இணைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம் ஆகியோர் ஆலய பரிபாலன சபை மற்றும் கிராமத்தின் கட்சி முக்கியஸ்தர்களுடன் பார்வையிட்டனர்.

இதேவேளை, இவ்வேலைத் திட்டத்தினை  விரைவாக நிறைவு செய்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு  ஆலய பரிபாலன சபைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

(ன)

Related Post