Breaking
Thu. May 2nd, 2024

மதீனா முனவ்வராவில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கிராஅத் போட்டியில், சர்வதேச மட்டத்தில் 03 ஆம் இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்த, தர்கா நகரை சேர்ந்த அல் ஹாஃபிழ் அல் காரி அல் ஆலிம் அஹமத் ஹலீமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாராட்டி கௌரவித்தார். 

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நேற்று வியாழக் கிழமை (18) இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை தொகுதி அமைப்பாளரும், பேருவளை பிரதேச சபை உறுப்பினருமான ஹஸீப் மரிக்காரும் கலந்துகொண்டார்.

அல் ஹாஃபிழ் அல் காரி அல் ஆலிம் அஹமத் ஹலீம், 82 நாடுகளுடன் போட்டியிட்டு 03 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post