Breaking
Fri. Dec 5th, 2025

மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில், 39 காற்றாலை (மின்பவர்) மூலமான மின் உற்பத்தி  தொடர்பான கலந்துரையாடல் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மன்னார் பிரதேசபை உறுப்பினர்கள் 21 பேர் கலந்துகொண்டதுடன், வடமாகாண நகர அபிவிருத்திக்கு பொறுப்பனான அதிகாரி மைக்கல் மற்றும் மன்னார் பிரதேசபையின் தொழில்நுட்ப அதிகாரியும் இந்த சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் அமைக்கப்பட இருக்கும் மின்பவர் (காற்றாலை மூலமான மின் உற்பத்தி தொடர்பாக) RDS, WRDS மற்றும் பள்ளிவாசல்கள், கேவில்கள் ஆகியவற்றின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை  அழைத்து, இது தொடர்பாக தெளிவூட்டுவதுடன், அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ஐ)

Related Post