Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க, தலைமன்னார் பியர் கிராமத்திற்கும், கடற்கரைக்குமான பாதையினை கொங்கிறீட் பாதையாக செப்பனிடும் பணிகள் நேற்று (21) பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பாதையானது மழை காலங்களில் நீர் நிறைந்து சேறும் சகதியாகவும் காணப்படுவதனால், மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதுடன், வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்ற வியாபாரிகளும் பெரும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த ஆரம்பகட்ட நிகழ்வின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்களான நயீம், டிப்னா குரூஸ், காட்டாஸ்பத்திரி இணைப்பாளர் றஹீம், பிரதேச இணைப்பாளர் முசம்மில், RDS உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

 

Related Post