Breaking
Sat. Apr 27th, 2024

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல்  பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

இதன் போது, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் விரிவான ஆராய்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பைஷர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஹம்மட் இஸ்மாயில், ஏ.எச்.எம். பௌசி , மஸ்தான், நசீர், மரைக்கார், முஜூபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, உலமாக்கள், புத்துஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Post