Breaking
Sat. May 18th, 2024

தலாவ கல்வடுவாவ மகா வித்தியாலய இல்லவிளையாட்டு போட்டி இறுதிநாள் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.. வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கிண்ணங்களை சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்..எதிர்கால எமது பிரதேச இளைய தலைமுறையினர் நல்ல விளையாட்டு வீரர்களாக வரவேண்டும். இந்த பிரதேசத்தில் விளையாட்டு துறையை ஊக்குவிக்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்….

பாடசாலை அதிபர் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் , பிரதேச முக்கியஸ்தர்கள் ஊர்மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்….

Related Post