Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையில் கல்கமுவ மொடல் முஸ்லிம் மகாவித்தியாளய அபிவிருத்தி மற்றும் கல்விக்கு உதவுதல் போன்ற விடையங்களை பாடசாலை நிருவாகத்துடன் கலந்து ஆராய்ந்து பாடசாலையின் எதிர்கால அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில்.

முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான எம்.என்.நஸீர்  அவர்கள்  (26 – 02 – 2019) பாடசாலை அபிவிருத்தி குழுவின் அழைப்பின் பேரில் பாடசாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்கமுவ அமைப்பாளர் அல் ஹாஜ் பத்ர், கல்கமுவ பாடசாலையின் செயலாளர் அன்பாஸ், கல்கமுவ மொடல் முஸ்லிம் மகாவித்தியாளய பெற்றார் மாணவர்சங்க உறுப்பினர்கள் பாடசாலையின் அதிபர், ஆசிரியர் குழாம் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post