Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தம்பலகாம பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் இடம் பெற்றது.

பிரதியமைச்சர் தலைமையில் நேற்று (08) இரவு தம்பலகாம பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அபிவிருத்திகள் உட்பட வாழ்வாதாரம், இளைஞர் அணி, பெண்கள் அணி, கல்வி ,கலை கலாசாரம் உட்பட இன்னும் பல பிரிவுகளும் உள்வாங்கப்பட்டன.

குறித்த மத்திய குழு தெரிவில் பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ்,  தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான ரஜீன்,தாலிப் அலி ஹாஜியார் ,வட்டார வேட்பாளர்கள் ,கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்

Related Post