Breaking
Tue. Apr 30th, 2024

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை முகத்திலிருந்து இந்தியா காரைக்கல் பகுதிக்கான கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்றது.

துறை முக அதிகார சபையின் தலைவர் அலுவலகத்தில் இன்று (19) இடம் பெற்ற குறித்த சந்திப்பில் கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஊடாக பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள், இலகு சேவை கட்டணங்கள், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சாதகங்களை அடைந்து கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது
இவ் இரம்ப கட்ட கலந்துரையாகலில் துறை முக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுலஹேசவிதாரன , சுங்கத் திணைக்கள உயரதிகாரி, குடிவரவு குடி அகழ்வு உயரதிகாரி, கப்பல் சேவை முகவர்கள் , பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றார்கள்.

Related Post