Breaking
Sat. Dec 6th, 2025

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் அவர்களின் தலைமையில் கலாவெவயில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர்கள், மத போதகர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Related Post