Breaking
Fri. May 3rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்கரப்பட்ட தலைமன்னார் படப்படி மற்றும் தலைமன்னார் கிராமம் போன்ற பகுதிகளுக்கு பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் அவர்களது தலைமையின் கீழ் இடம்பெற்றது.

2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தலைமன்னார் படப்படி கிராமத்திற்கான கிறவள் பாதை மற்றும் தலைமன்னார் கிராமத்திற்கு 1 மில்லியன் பெறுமதியான தார் வீதியும் அமைக்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலருமான றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு புனரமைப்பு வேலையினை ஆரம்பித்துவைத்தார்..

மேலும் இந்நிகழ்வில் தேசிய இளைஞர்சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் முனவ்வர், பிரதேச சபை உறுப்பினர் புனிதா மற்றும் கிராம இணைப்பாளர் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post