Breaking
Thu. May 2nd, 2024
கிண்ணியா மாகாத் நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் நேற்று (12.10.2019) ஆரம்பித்து வைத்தார்.
விளையாட்டு மைதான புனரமைப்புக்காக வர்த்தக வாணிப கைத்தொழில் நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற செயலணி திட்ட அலகு எனும் திட்டத்தில்  20 இலட்சம் ரூபா செலவில்   குறித்த வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் வைத்தியர். ஹில்மி முகைதீன் பாவா,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி,பிரதியமைச்சரின் இணைப்பாளர்  ஈ.எல்.அனீஸ் மற்றும் வட்டார வேட்பாளர் இம்தியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்..

Related Post