Breaking
Tue. Apr 30th, 2024

தமிழ் பேசும் நாம் தமிழ் மொழியில் தான் தேசிய கீதத்தை பாடுவோம் இதனையே தமிழ் பேசும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் இதனை இந் நாட்டு அரசாங்கம் உணரவில்லை அடிப்படை உரிமைகளே இவ்வாறு மறுக்கப்படுகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

தம்பலகாமம் அல் ஹிக்மா பாடசாலையில் இன்று (06)இடம் பெற்ற பல்கலைக்கழகம்,கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை கௌரவித்து மற்றும் பாடசாலைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் சிங்களம்,தமிழ் மொழிகள் ஆட்சி அதிகார மொழிகளாகும்

இந்த நாட்டில்35 வீதமான தமிழ் பேசுபவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் இவ்வாறாக மொழி உரிமை இப்போதே மறுக்கப்படுகிறது கடந்த 04 ம் திகதியே இது மறுக்கப்பட்டது தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரமே பாடினார்கள் நாங்கள் தேசிய கீதத்தில் விடுதலைப் புலிகளை பற்றியோ ஈழத்தை பற்றியோ பாடவில்லை ஸ்ரீலங்கா தாயே என்றே நாட்டுப் பற்றுடன் பாடுகிறோம் தமிழ் மொழிக்கான அங்கீரத்தை மழுங்கடிக்கச் செய்யும் இவர்கள் நாளைய நமது சமூகத்தின் ஏனைய உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படப் போகிறதோ என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இனவாதப் போக்குகளை மீண்டும் கொண்டு வந்து சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள். 18 திருத்தங்களில் 18 ஆவது யாப்பின் திருத்தத்தில் பௌத்த மதங்களும் ஏனைய மதங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்

என சுட்டிகாட்டும் அதே நேரம் மொழிகளை பற்றி பிரித்து பேசப்படவில்லை சமமான முறையில் எங்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இதற்காக எதிர்காலத்தில் எம்மை பாதுகாக்கக் கூடிய தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும்.

முஸ்லிம்களின் பர்தாவை பற்றி,ஷரிஆவை பற்றி,மத அனுஷ்டானங்களை அறபி மொழியை பற்றியெல்லாம் பேசினார்கள் இவ்வாறாக இனக்குரோதங்களை வளர்க்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேரனையாக முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் அதுரலிய தேரர் கொண்டு வந்தார் இதை ஆளுங்கட்சி எதிர் கட்சி என்பன கூட்டாக கொண்டு வரவில்லை தனி நபர் பிரேரனை கடந்த 1952 ல் கொண்டு வந்த முஸ்லிம் விவாக சட்டம் ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டே கொண்டு வரப்பட்டது.

இதை விடுத்து ரௌடித் தனங்களுடன் போலி வேசம் போட்டு தனிநபர் பிரேரனையை கொண்டு வருகிறார்கள்.

21,22 ஆவது திருத்தம் தொடர்பிலும் விஜேதாச ராஜபக்ச மற்றொரு பிரேரனை இவரது பிரேரனையால் இந்த மாவட்ட எம்.பிக்கள் மாத்திரமல்ல சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

தேசிய கீதத்தையே சிங்கள மொழியில் பாட வேண்டும் எனக்கூறுகிறார்கள் இதில் தமிழ் மொழி மறுக்கப்படுகிறது எதிர் காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்காக போராடிய வேண்டிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தெரிவு செய்யுங்கள் என்றார்.

Related Post