Breaking
Fri. Dec 5th, 2025
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொருளாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஹுஸைன் பைலா அவர்களின் குடும்பத்தினரால், மஜ்மா நகரில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கான குடிநீர் தாங்கிகள் இன்று (27) வழங்கிவைக்கப்பட்டது.
 
மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி , பிரதேச சபை தவிசாளர் நெளபல், பிரதி தவிசாளர் அமீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெளபர், ஜெஸ்மின், நபீரா, ஜெமீலா உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
 
 
 

Related Post