Breaking
Sat. Dec 6th, 2025
கௌர­வ­மான பெண்­க­ளது ஆடை­களைக் களைந்து அவர்­களை நிலத்தில் போட்டு மிதிக்க வேண்டும் என்­ற­ள­வி­லான கதை­களைக் கூறும் அள­வுக்கு எமது உயர் கல்வி அமைச்சின் தரம் மாறி­யுள்­ள­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோசி சேனா­நா­யக்க விசனம் தெரி­வித்தார்.
கண்டி, ஸ்ரீ புஷ்­ப­தான மண்­ட­பத்தில் இடம்­பெற்ற கூட்டம் ஒன்­றி­லேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஆக்­கூட்­டத்தில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
இன்று உயர் கல்வி அமைச்­சிற்குப் பாரி பல பொறுப்­புக்கள் உண்டு. நாட்டின் இளைஞர், யுவ­தி­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு திட்­ட­மிட வேண்­டி­ய பல்­வேறு தேவைகள் இருக்­கின்­றன. ஆனால் அவற்­றை­யெல்லாம் மறந்து தமது வடிகான் வாயினால் ஏதேதோ உள­றித்­தள்­ளு­கின்­றார்.
இந்­நாட்டில் கௌர­வ­மான தலை­வர்கள் இரு­வ­ரது புதல்வி, நாட்டின் தலை­வ­ராக இருந்­தவர் பற்றி அகௌ­ரவமாகப் பேசும் நிலையில் எமது உயர்­கல்வி அமைச்சு காணப்­ப­டு­கின்­றது. ஒரு பெண்ணின் ஆடையைக் களைதல் என்­பது எவ்­வ­ளவு பாரா­தூ­ர­மான குற்­றச்­செயல். அதனை நாவால் கூறு­வதும் ஒரு­வகை வன்­மு­றை­யாகும். இப்­ப­டி­யா­ன­வர்கள் எவ்­வாறு இளைஞர், யுவ­தி­க­ளுக்­காக கல்­வியைத் திட்­ட­மிட முடியும்.
இன்று புலம்­பெ­யர்ந்த மக்கள் பற்றி தொடர்ந்து பேசப்­ப­டு­கி­றது. அரசின் மடியில் தவழ்ந்து விளை­யாடும் குமரன் பத்­ம­நாதன் ஜனா­தி­பதி ஆலோ­சகர் சிவ­நே­சத்­துரை சந்­தி­ர­காந்தன், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உப­த­லை­வரும் பிரதி அமைச்­ச­ரு­மான முர­ளிதரன் இவர்கள் யார். இவர்­களின் வாரி­சு­கள்­தானே புலம் பெயர்ந்­தவர்களாக உள்­ளனர்.

Related Post