Breaking
Sat. Dec 6th, 2025

சீத்தாவக்கை பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களில் ஐவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததையடுத்து அந்த பிரதேச சபையின் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது.

ஐந்து உறுப்பினர்கள் எதிரணிக்கு மாறியதையடுத்து அந்த பிரதேச சபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.

இதன்பிரகாரம் அந்த பிரதேச சபையில் எதிரணிக்கே பெரும்பான்மை இருக்கிறது.

Related Post