Breaking
Fri. Dec 5th, 2025
சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார்.
நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் உங்களை கவனிக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன். பெறுமதிமிக்க பல இடங்களை மஹிந்த ராஜபக்ஸ தமது சிநேகபூர்வமானவர்களுக்கு வழங்கி, காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றினார்கள். அவற்றை வேறு நபர்களுக்கு வழங்கினார்கள். அந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, அந்த காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்குவோம் என இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாக கூறிக் கொள்கின்றேன். அவர்களை அனைவரையும் சட்டத்திற்கு முன்பாக கொண்டு சென்று தண்டனையை பெற்றுக்கொடுப்போம். எமது புதிய அரசாங்கத்தின் ஊடாக அனைத்து இனத்தவரும், அனைத்து மதத்தவரும் சுதந்திரமாக தமது நடவடிக்கை முன்னெடுக்க முடியும் என்பதனை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

Related Post