Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கினங்க தம்பதெனிய தேர்தல் தொகுதியின் கடகபொல வட்டாரத்துக்கான அபிவிருத்தி சம்மந்தமான கூட்டமும் வட்டார அமைப்பு ஆரம்பித்தலும் வாட்டார வேட்பாளர்களான பைசர், லதீப் ஆகியோரின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம்.நஸீர் தலைமையில் கடந்த  (03) நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் லஹீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டதுடன் வரும் மாகாணசபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிஸ்ஸுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான்,குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கல்வி பொறுப்பாளர் ரியாஸ்,ஹொரம்பாவ வட்டார வேட்பாளர் ரஸீஸ் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post