அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று -28- வியாழக்கிழமை  ஆரம்பமானது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கான 88 வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இச் சேவை முதலில் தென்மாணத்தில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
sfsrtt fsfss