Breaking
Fri. Dec 5th, 2025

நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் எவ்வித கருத்துக்களையும் உறுப்பினர்கள் வெளியிட அனுமதிக்கப்பட மாட்டாது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் நாடாளுமன்றின் உறுப்பினர்கள், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் உரைகளை ஆற்ற இடமளிக்கக் கூடாது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையை, சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Related Post