Breaking
Fri. Dec 5th, 2025
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் (தற்போது தேசிய அரசில் அங்கம் வகிக்காதவார்கள்) தேசிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை இணைந்துகொள்ளவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த அறுவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த அறுவரும், இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. TM

By

Related Post