இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைக் காலம் ஆரம்பமாகவுள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 02ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இடம்பெற உள்ளது.

தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெற இருப்பதால் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் தினம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.