Breaking
Fri. Dec 5th, 2025
இன, மத ரீதியான விமர்சனங்களை முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலான சட்டதிருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகள் இன, மத வெறுப்புகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாக பதட்ட நிலைமை மற்றும் இன மோதல்கள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாத வகையில் அரசாங்கம் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

By

Related Post