Breaking
Fri. Dec 5th, 2025

இம்முறை ஹஜ் யாத்திரைக்காக இலங்கையில் இருந்து முதற்கட்டமாக புறப்பட்டு சென்ற குழுவினர் சவுதி அரேபியாவின் ஜோடா நகரை அடைந்துள்ளனர்.

62 யாத்திரிகர்கள் இவ்வாறு சவுதி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களை சவுதிக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, ஹஜ் புனித யாத்திரைக்காக இலங்கையில் இருந்து இம்முறை 2240 பேர் செல்லவுள்ளனர்.

மக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டம் காரணமாக, இந்த வருடம் யாத்திரிகர்களின் தொகை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post