Breaking
Fri. Dec 5th, 2025
கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை பிணையில் எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில், அவரது தாயார் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டதெனிய சிறுமி சேயாவின் கொலையின், சந்தேக நபர் கொண்டயா சில நாட்களுக்கு முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் பிணைக்கு கையெழுத்திட யாரும் முன்வராத நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று கொண்டாயாவின் தாயார் பிணைக்கு கையெழுத்திட்டுள்ளார்.

இக்கொலை,தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ள, உண்மை குற்றவாளியான இவரது சகோதரர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post