சண்டை அல்லது கருத்து மோதல்கள் ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு-அமீர் அலி

இந்த ஓட்டமாவாடிச் சந்தியில் ஓர்  விபத்து நடந்தால் அங்கு சண்டை அல்லது கருத்து மோதல்கள் இடம் பெறும் அவ்வாறான கருத்து மோதல் கூட ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு அவ்வாறான என் கனவினை இந்த கல்லூரி கடந்த பத்து வருடங்களாக நிபர்த்தி செய்து வருகின்றது. கடந்த, 26. 12 . 2016  அன்று கல்குடா இண்டர் நெஷனல் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே   மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் பேசுகையில் இவ்வாறான சேவையினை வழங்குகின்ற ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள். இவ்வாறான சேவையினை வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆகிய நீங்கள் ஆதரவினை  தொடர்ந்தேர்ச்சியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.